அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் துரித கதியில்- பிரதேச சபையின் செயலாளர் இ.தயாபரன்

மன்னார் பிரதேச சபையினால் 2016ஆம் ஆண்டுக்கான பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிக துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச சபையின் செயலாளர் இராசையா தயாபரன் தெரிவித்தார்.

குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மன்னார் பிரதேச சபையின் செயலாளர் தெரிவிக்கையில்,

2016ஆம் ஆண்டு எம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மக்களால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட ஒழுங்கிலும், பிரதேச ரீதியாக சமமாகவும் தெரிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தலைமன்னார் கிராமத்தில் 11.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சுற்றுலாத்தள நிர்மாணம், பேசாலை தெற்கு சென் அந்தோனியார் உள்ளக வீதி புனரமைப்பு,பெரியகரிசல் சின்னக்கரிசல் உள்ளக வீதி புனரமைப்பு, தாழ்வுபாடு சென் அந்தோனியார் வீதி புனரமைப்பு ஆகியவை 5.20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், முதலைக்குத்தி உள்ளக வீதி 2.30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், தாழ்வுபாடு பாடசாலை கொங்கறீட் வீதி 1.18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த வேலைகள் சமூக கண்காணிப்பு குழுக்களால் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
மேலும் வீதி விளக்குகள் பொருத்துதல், இறைச்சி கடைகள் நிர்மாணித்தல், வீதிகள் திருத்த வேலைகள், நீர் விநியோகம் என பல வேலைத்திட்டங்களை நடை முறைப்படுத்தும் வகையில் வடமாகாண சபை அதிகாரிகளுக்கு அனுமதியினை பெற்றுக்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடைக்கப்பெற்றதும் குறித்த வேலைத்திட்டங்களும் துரித கதியில் நிறைவேற்றப்படும் என மன்னார் பிரதேச சபையின் செயலாளர் இராசையா தயாபரன் மேலும் தெரிவித்தார்.


மன்னார் நிருபர்-

(23-05-2016)


மன்னார் பிரதேச சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் துரித கதியில்- பிரதேச சபையின் செயலாளர் இ.தயாபரன் Reviewed by NEWMANNAR on May 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.