அண்மைய செய்திகள்

recent
-

2017 முதல் புதிய மாற்றத்தை எதிர் நோக்கப்போகும் வட மாகாணம்...


வடமாகாண பாடசாலைகளில் அடுத்த ஆண்டு முதல் நேர அட்டவணையில் மாற்றம் செய்யவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் வடமாகாண பாடசாலைகள் 8 மணி முதல் 2 மணி வரையான கால அட்டவணைகளின் அடிப்படையிலே கற்றல் செயற்பாடுகள் நடைபெற்று வந்தன.

தற்போது குறித்த நேர அட்டவணை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாற்றப்பட உள்ளது.

இதேவேளை பாடசாலை நேரம் மாற்றப்படுவதனால் அதற்கு ஏற்ற வகையில் போக்குவரத்து வசதிகள் செய்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடனும் கலந்துரையாடி முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வவுனியா மாவட்ட பாடசாலைகளில் இந்த விடயம் ஏற்கெனவே நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இந்த நடைமுறை எதிர்வரும் 2017 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஆர்.இரவீந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2017 முதல் புதிய மாற்றத்தை எதிர் நோக்கப்போகும் வட மாகாணம்... Reviewed by Author on October 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.