அண்மைய செய்திகள்

recent
-

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் “விழுதுகள்”


சமூகத்திற்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் "விழுதுகள்" நிறுவனம் தற்பொழுது பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

யுத்தம்,இயற்கை அனர்த்தம்,போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டு பெண் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் குடும்ப ங்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.


கிளிநொச்சி ,முல்லைத்தீவு, மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தையல் பயிற்சிகளையும்,திருகோணமலை,புத்தளம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மேலைத்தேய உணவு வகைகளை தயாரிக்கும் தொழில் பயிற்சியினை முன்னெடுத்து வருகின்றது.இதன் மூலம் குறித்த பெண்களின் குடும்பங்களின் பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி வருகின்றது.

மேலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுகாதாரம்,பெண்கள் உரிமைகள் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் “விழுதுகள்” Reviewed by NEWMANNAR on December 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.