அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (6) உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடல் பகுதியில் அத்து மீறி நுழைந்து 2 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி புதன் கிழமை அதிகாலை இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் தாழ்வுபாடு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த மீனவர்கள் விசாரனைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த 12 இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபரின் பரிந்துரை மன்னார் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெற்ற நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (6) மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் நிருபர்
(6-1-2017)




தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை. Reviewed by NEWMANNAR on January 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.