அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உற்பட இருவர் கைது-

மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெண் ஒருவர் உற்பட இருவரை புதன் கிழமை (4) கைது செய்துள்ளதாக மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மன்னார் மூர்வீதி மற்றும் உப்புக்குளம் பகுதியில் வைத்து குறித்த இரு நபர்களையும் கைது செய்துள்ளனர்.

-கைது செய்யப்பட்ட பெண்ணிடம் 110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும்,மற்றைய நபரிம் 60 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பபட்டுள்ளதாகவும், மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருவதாகவும், மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் மேலும் தெரிவித்தார்.


மன்னார் நிருபர்-
6-1-2017

மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உற்பட இருவர் கைது- Reviewed by NEWMANNAR on January 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.