மன்னார் பேசலை முருகன் கோவில் கிராமத்தில் 'செமட்ட செவன' வீடமைப்பு திட்டத்தின் கீழ் 12 வீடுகள் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 'செமட்ட செவன' வீடமைப்பு நிர்மாணப்பணிகள் நேற்று (28) வெள்ளிக்கிழமை பேசலை முருகன் கோவில் கிராமத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஆர்.சுவர்ணராஜா தலைமையில் நடை பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வீடமைப்பிற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் கேஎஸ்.வசந்தகுமார், ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமியு முஹம்மது பஸ்மி, பேசலை முருகன் கோவில் பிரதான தவிசாளர் குப்புசாமி ஆறுமுகம் , ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
பேசலை முருகன் கோவில் பிரதம குரு தர்மகுமார சர்மா குருக்களின் சமய அனுஸ்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில் மேற்படி அதீதிகளால் குறித்த கிராமத்தில் 12 வீடுகள் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.#
மன்னார் நிருபர்-
(28-1-2017)
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஆர்.சுவர்ணராஜா தலைமையில் நடை பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வீடமைப்பிற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் கேஎஸ்.வசந்தகுமார், ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமியு முஹம்மது பஸ்மி, பேசலை முருகன் கோவில் பிரதான தவிசாளர் குப்புசாமி ஆறுமுகம் , ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
பேசலை முருகன் கோவில் பிரதம குரு தர்மகுமார சர்மா குருக்களின் சமய அனுஸ்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில் மேற்படி அதீதிகளால் குறித்த கிராமத்தில் 12 வீடுகள் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.#
மன்னார் நிருபர்-
(28-1-2017)
மன்னார் பேசலை முருகன் கோவில் கிராமத்தில் 'செமட்ட செவன' வீடமைப்பு திட்டத்தின் கீழ் 12 வீடுகள் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-
Reviewed by NEWMANNAR
on
January 28, 2017
Rating:
No comments:
Post a Comment