அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க அமைச்சர் மகிந்த அமரவீர களத்துக்குவிஜயம்


தலைமன்னார் கடலில் மீனவர்கள் காலாகாலமாக பாவித்து வந்த சுருக்குவலை மீன்பிடித்தொழிலில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை நிவர்த்தி செய்து தருமாறு அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் அந்தப்பிரதேச மீனவர்கள் விடுத்த வேண்டுகளை அடுத்து அதற்கான முயற்சிகளை அமைச்சர் மேற்கொண்டுவருவதாக அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சர் மேற்கொண்ட உடன் நடவடிக்கை அடுத்து கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் நாளை மறுதினம் சனிக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்து நிலமைகளை பார்வையிடஉள்ளார்.

அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் இன்று (23) தலைமன்னார் மீனவர் சங்கப்பிரதிநிதி மொஹமட் ரூமி தலைமையில் சென்ற குழுவினர் தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தெரிவித்தனர்.

3/4 அங்குல கண்வலையைப்பாவித்து பரம்பரைபரம்பரையாக தொழிலை மேற்கொண்டு வந்த எங்களை தற்போது ¼ அங்குல கண்வலையைப்பயன்படுத்தி மீன்பிடித்தொழிலை மேற்கொள்ளுமாறு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும், கடற்படையினரும் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

பொதுவாக தலைமன்னார்கடலில் 'சூடை, கரட்டை, சாளை' போன்ற மீன்களே இருக்கின்றன. இந்த மீன்களை ¾ அங்குல கண்வலையை ப்பயன்படுத்தாமல் பிடிக்க முடியாது. ¼ அங்குலகண்வலையைப் பயன்படுத்தி மீனவத்தொழிலைமேற்கொள்ளுமாறு நாங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

இந்த வலையில் இந்தக்கடலில் 90வீதமாக இருக்கும்சூடை, சாளை, கரட்டை அகப்படாது. இந்த மீன்களையே நம்பி வாழ்க்கை நடாத்தும் நாம் எவ்வாறு ஜீவனோபாயம் நடத்துவது?
அத்துடன் நவம்பர் மாதம் தொடக்கம் ஏப்ரல் வரையே இந்தத்தொழிலை மேற்கொள்ள முடியும். ஏனெனில் ஏனைய காலங்களில் இந்தக்கடலில் இந்த மீன்கள் இருக்காது. அதுமட்டுமன்றி நாங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையே தொழில் செய்து வருகின்றோம்.

எமது கடற்பிராந்தியத்திற்கு சுமார் 10 கிலோமீட்டருக்கு அப்பால் இந்திய கடல் எல்லை இருக்கின்றது. இதனால் ஆறு மணிக்குப்பிறகு பெரும் படகுகளிலும் டோலர்களிலும் இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் ஊடுருவி மீன்களை அள்ளி வருகின்றனர்.

சிறுபடகுகளில் தொழில் செய்யும் நாங்கள் அவர்களுடன் முரண்பட்டு போட்டி போட்டு தொழில் செய்ய முடியாது. அத்துடன் எமது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. அவ்வாறான சில சம்பவங்கள் நடந்தும் உள்ளன.

எனவே குறைந்தது ஓர் அங்குல கண்வலையைப் பாவித்தேயாயினும் எமக்கு மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தாருங்கள்'என தலைமன்னார் மீனவர் சங்கப்பிரதிநிதி மொஹமட் ரூமி தலைமையில் வந்த மீனவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

மீனவர்களின்பிரச்சினையை கேட்ட அமைச்சர் றிஸாட் பதியுதீன் உடனடியாக அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் தொடர்பு கொண்டு மீனவர்களின் பிரச்சினையை தீர்த்துவைக்க விடுத்த வேண்டுகோளை அடுத்தே தலை மன்னர் மீனவர்களை சனிக்கிழமை களத்தில் சந்தித்துப் பேச்சு நடத்த அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.(படம்)
-மன்னார் நிருபர்-
(23-2-2017)


தலைமன்னார் மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க அமைச்சர் மகிந்த அமரவீர களத்துக்குவிஜயம் Reviewed by NEWMANNAR on February 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.