அண்மைய செய்திகள்

recent
-

மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய மாந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட 'தூய லூர்து அன்னை ஆலயம்' அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைப்பு-PHOTOS

மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய மாந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட 'தூய லூர்து அன்னை ஆலயம்' அபிசேகம் செய்யப்பட்டு சனிக்கிழமை 18-02-2016  மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தூய லூர்து அன்னை ஆலயத்தின் திருவிழா இன்றைய தினம் (சனிக்கிழமை) மாலை கொண்டாடப்படுகின்ற நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட குறித்த ஆலயம் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய ஆயர் கிங்ஸிலி சுவாம் பிள்ளை ஆண்டகையின் தலைமையில் ஆயர்கள் மற்றும் குருக்கள் இணைந்து அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய ஆயர் கிங்ஸிலி சுவாம் பிள்ளை ஆண்டகையின் தலைமையில் ஆயர்கள் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுத்தனர்.

இதன் போது ஓய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்கூரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டார்.

-மேலும் ஆலய திறப்பு விழாவிற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெணாண்டோ பிள்ளை பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் உற்பட மன்னார் மறைமாவட்டம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த ஆலய திறப்பு விழா மற்றும் திருவிழா திருப்பலியில் சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய மாந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட 'தூய லூர்து அன்னை ஆலயம்' அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைப்பு-PHOTOS Reviewed by NEWMANNAR on February 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.