அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் தொடரும் போராட்டம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக தொடர்கிறது.

காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர்.

நாம் 1990 ஆம் ஆண்டு முதல் மேறபடி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றோம் இதுவரை எமக்கு யாரும் உதவவில்லை எங்களின் விடயத்தில் எல்லோரும் அக்கறையின்றியே இருந்து விட்டனர் என மக்கள் கருத்து வெளிட்டுள்ளனர்.



மேலும், நாங்கள் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில்லாவது அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் தொடரும் போராட்டம் Reviewed by NEWMANNAR on March 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.