அண்மைய செய்திகள்

recent
-

இயேசுநாதரை ஒப்பிட்டுப் பேசவில்லை முதலமைச்சர் தன்னிலை விளக்கம்...


இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமானந்தரின் வாழ்க்கையையும் எவ்விதத்திலும் தான் ஒப்பிட்டுப் பேசவில்லை எனத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இவ்விடயம் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்களில் அரசியல் கலந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சரால் நேற்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தன்னிலை விளக்க அறிக்கையி லேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் முதலமைச்சர் குறிப்பிடுகையில்,

நான் தினப்புயல் என்ற பத்திரிகைக்குக் கொடுத்த செவ்வி சம்பந்தமாகச் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. நான் இயேசு கிறிஸ்து நாதரை அவமதிக்கும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

முதலில் இணையத் தளத்தில் வந்த செய்தியை யாரும் பார்த்தார்களானால் அதில் வரும் கடைசி சட்டம் (frame) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். செவ்வி எடுத்தவர் முதல் சட்டங்களில் பேசியவாறு கடைசி சட்டத்தில் பேசவில்லை. அவர் தெளிவாகப் பேச முடியாதவர். மிகவும் பதிவானகுரலில்த் தான் முன்னைய சட்டங்களில் கேள்விகேட்டு வந்தார். என்னிடம் கடைசிசட்டத்தின் நிகழ்வின் போதும் அவ்வாறேபேசினார். ஆனால் வெளிவந்த இணையத்தளச் சட்டத்தில் அவர் மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். என் முன்னிலையில் அவர் அவ்வாறு பேசவில்லை.

அத்துடன் அவர் கேட்டதாக ஒளிபரப்பாகியிருக்கும் கேள்விக்குநான் தந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என் பதில்கள் வேண்டுமென்றே ஒலியைக் குறையவைத்து நேயர்களுக்குக் கேட்காதவகையில் தரப்பட்டிருக்கின்றன. அவரின் கேள்விமட்டும் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. சிறுபிள்ளைத்தனம் என்று அவர் கூறியதாகஎனக்கு ஞாபகமில்லை. எது எவ்வாறு இருப்பினும் நடந்தது இதுதான்.

செவ்விஎடுத்தவர், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி உங்கள் குருவாகஏற்கலாம். நீங்கள் ஒரு நீதியரசர் தற்போது முதலமைச்சர். இது தவறான தல்லவா என்று கேட்டார். அதற்குநான் குற்றவாளி எனக் காணப்பட்டு சிலுவையில் அறைந்த ஒருவரை 2000 வருடமாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா என்றேன்.

அதைத்தான் இயேசுவையும் பிரேமானந்த சுவாமியையும் முதலமைச்சர் ஒப்பிட்டு விட்டார் என்றுசிலர் கூறிஎனக் கெதிராக கிறீஸ்தவ சகோதரர்களை ஏற்றிவிடஎத் தனித்துள்ளார்கள்.
இயேசுகிறிஸ்து நாதரின் பரம அபிமானி காலஞ்சென்ற பிரேமானந்த சுவாமி. பல பேச்சுக்களில் இயேசுநாதரின் வாழ்க்கையில் இருந்துமேற்கோள்களை எடுத்துரைப்பார்.

அன்னைவேளாங்கன்னியைப் போய் தரிசித்து வாருங்கள் என்று எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அறிவுரை வழங்கியவரே அவர்தான். இன்று பல்லாயிரக்கணக்கான மேலை நாட்டுகிறிஸ்தவ அன்பர்கள் அவ ரின் அபிமானிகளாகஉள்ளார்கள்.

அதுபோக 1958ம் ஆண்டிலேயே நான் றோயல் கல்லூரியில் சமயஒப்பீட்டுபரிசு (Comparative Religion) பெற்றவன். பைபிளில் இருந்து Gospel according to St.Mathew என்பதே கிறீஸ்தவம் சம்பந்த மானபாடம். இதேபோல் இஸ்லாம், பௌத்தம் இந்துமதம் போன்றஎல்லா மதங்களிலிருந்தும் பாடவிதானம் தரப்பட்டுஅவற்றில்முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலேயே பரிசுபெற்றவன்.

அன்று தொடக்கம் இன்று வரைஎல்லாமதங்களையும் அனுசரித்துப் போற்றிவருபவன். கிறீஸ்தவ நிறு வனங்களுடன் சம்பந்தப்பட்டவன். இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்துவருபவன். வருடாவருடம் St.Antony Feast காலத்தில் சென்று வணங்கி வருபவன். நான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமாநந்தரின் வாழ்க்கையும் எந்தவிதத்திலும் ஒப்பிட்டுபேசவில்லை.

குற்றவாளியொரு வரை எவ்வாறு குருவாக ஏற்கலாம் என்பதற்கு யேசு கிறீஸ்துவை உதாரணமாகக் கூறி னேன். இயேசுநாதரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, சுவாமியின் மீது சுமத்தப்பட்டகுற்றங்கள் வேறு, எவ்வாறு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று பலதைப்பற்றியும் பலர் எழுதியுள்ளார்கள்.

இருவரையும் ஒப்பிடமுனைந்தவர்கள் அவர்களே. நான் என்னிடம் கேட்டகேள்விக்கு ஒரு முன்னு தாரணம் கூறினேன் அவ்வளவுதான். அது கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்திவிட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மனவருத்தம் அடையவேண்டியவிதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன் என முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



இயேசுநாதரை ஒப்பிட்டுப் பேசவில்லை முதலமைச்சர் தன்னிலை விளக்கம்... Reviewed by Author on April 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.