அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் தென்பகுதியில் ஆணொருவர் கர்ப்பமான விநோத சம்பவம்....


வைத்தியசாலை ஒன்றினால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய ஆண் ஒருவர் கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது.

சூரியவெவ நகரத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர், தவறான பரிசோதனை அறிக்கை மூலம் கர்ப்பமானதாக தெரியவந்துள்ளது.

சூரியவெவ வைத்தியசாலையில் ஆணொருவருக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட பரிசோதனை அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வைத்தியரின் பரிந்துரைக்கமைய குறித்த நபரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த அறிக்கை வைத்தியர் ஒருவரிடம் காட்டப்பட்டுள்ளது.

அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த வைத்தியர், இந்த அறிக்கைக்கமைய குறித்த ஆண் கர்ப்பமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது இவ்வாறு பல நோயாளிகளுக்கு தவறான வைத்திய அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளமையினால் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி உள்ளனர். சில நோயாளர்கள் அவமானம் காரணமாக இந்த விடயத்தை யாரிடமும் கூறுவதில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்திய பரிசோதனை கூடத்தில் வைத்திய பரிசோதனை கூட ஆய்வாளர் ஒருவர் இருப்பது அவசியமாகும்.

எனினும் குறித்த பிரதேசத்தின் வைத்திய பரிசோதனை கூடத்தினுள் சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை எழுதியவர்களே சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக சூரியவெவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட அதிகாரி வைத்தியர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் மற்றும் அவர்கள் பெற்றுக் கொள்ளும் வைத்திய அறிக்கைக்கும் இடையில் சில சந்தர்ப்பங்களில் எவ்வித தொடர்பும் இல்லை என தான் அறிந்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.


இலங்கையின் தென்பகுதியில் ஆணொருவர் கர்ப்பமான விநோத சம்பவம்.... Reviewed by Author on April 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.