அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடக மகாநாட்டில் பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு-(படம்)


மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ் வருடத்திற்கான ஊடக மகாநாடு நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் இடம் பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் இடம் பெற்ற குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் கலந்து கொண்டார்.

இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மான்றத்தின் பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள்,நிஸ்கோ முகாமையாளர் சைமன் சில்வா,கணக்காளர் ஜோன் பொஸ்கோ உற்பட மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந் தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளூடாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

எனினும் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக வேளைத்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்துவதில்லை எனவும்,எல்லா நிகழ்வகளையும் தொகுத்து அறிக்கையாக ஊடகவியலாளர்களுக்கு சமாப்பிக்கப்படுகின்ற போது முழுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கலந்து கொண்ட மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.














மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடக மகாநாட்டில் பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு-(படம்) Reviewed by NEWMANNAR on May 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.