அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் முன்னாள் நகர பிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தருமான எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று(15) இடம்பெற்றது.

குறித்த நினைவஞ்சலி நிகழ்வு அன்னாரது இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

மறைந்த நகர பிதாவின் உருவப்படத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவரான எஸ்.ஞானப்பிரகாசம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தராக செயற்பட்டதோடு தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில், திடீர் சுகவீனம் காரணமாக கடந்த வருடம் மே மாதம் 15 ஆம் திகதி காலை மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் நகர சபையின் முன்னாள் நகர பிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் Reviewed by NEWMANNAR on May 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.