அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ் பெண்....


பிரித்தானியாவில் உள்ள லண்டன் மாநகராட்சி கவுன்சிலராக தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தொழில் அதிபர் ரெஹானா அமீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியா நாட்டின் லண்டன் மாநகரில் உள்ள 25 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் வின்ட்ரை வார்டின் கவுன்சிலர் பதவிக்கு இந்தியாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் (43) போட்டியிட்டார். இவர் தமிழகத்தின் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து வின்ட்ரை வார்டின் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் லண்டன் மாநகராட்சியில் கவுன்சிலரான முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் தட்டிச்சென்று உள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ரெஹானா அமீர், கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நான், சாலை பாதுகாப்பு, காற்றை தூய்மைபடுத்துதல், மன ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவேன். மேலும் அனைத்து வகையான தொழில்களுக்கும் சிறந்த பிரதிநிதித்துவம் அளிப்பேன் என கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ் பெண்.... Reviewed by Author on May 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.