அண்மைய செய்திகள்

recent
-

உலகின் முதலாவது லேசர் வெசாக் அலங்கார பந்தல் இலங்கையில்....


உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த அலங்கார பந்தல் புதன் கிழமை மாலை 7.00 மணிக்கு முதன் முறையாக காட்சிப்படுத்தப்படும்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டலுக்கமைவாக நிர்மாணிக்கப்படுகின்ற இந்த நவீன வெசாக் பந்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும்.


கொலந்தொட்ட வெசாக் வலயத்திற்கு இணையாகவே இந்த நவீன வெசாக் அலங்கார பந்தல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படுகின்ற உலகின் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இதன் உயரம் 60 அடிகளாகும். அகலம் 40 அடிகளாகும். புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாப்பாத்திரங்கள் இந்த லேசர் கீற்று வெசாக் அலங்கார பந்தலில் காட்சிப்படுத்தப்படும். ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் முதலாவது லேசர் வெசாக் அலங்கார பந்தல் இலங்கையில்.... Reviewed by Author on May 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.