மன்னாருக்கு வருகைதந்த முன்னாள் அமைச்சசர் A.L.M.அதாவுல்லாஹ்....மன்னார் நகருக்கான குழு ஆரம்பம்......
தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான A.L.M.அதாவுல்லாஹ் இன்று 21-07-2017 மாலை 6- 30 மணியளவில் வருகை தந்து மன்னார் நகர் உப்புக்குள கிராமத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது
இக்கூட்டத்தில் தேசிய கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் மன்னார் நகர கட்சி அமைப்பாளருமான தேச அபிமானி எம்.ஏ.எம். நளர் அவர்கள் ஆரம்ப உரை மற்றும் வரவேற்புரை நிகழ்த்தியபின்
கட்சியின் தேசிய தலைவர் அல் ஹாஜ் A.L.M.அதாவுல்லாஹ் அவர்கள் கட்சியின் நிலைப்பாடு மற்றும் வட மாகாணத்தில் அக்கட்சியின் தேவை குறித்தும் பேசினார்.
- மன்னார் முஸ்லீம்களின் அபிவிருத்தியும் அவ்ர்களின் வளர்ச்சியும்()
- முஸ்லீம் தலைமைகளின் ஒற்றுமையான செயற்பாட்டிற்கு மக்களின் ஒற்றுமை அவசியம்.
- முஸ்லிம் மக்களாகிய நாம் எமது மார்க்கத்தின் ஈமான் கொண்டு அல்லாவின் வழியில் செல்லவேண்டும்.
- பணத்திற்காக அல்ல மக்களின் உரிமைக்காக அவர்களின் சந்தோசத்திற்காக பாடுபடவேண்டிய பொறுப்பும் தேவையும் முஸ்லிம் கட்சிகளுக்கும் தலைமைகளுக்கும் உள்ளது அதை உணர்ந்து செயல்படவேண்டும்.
- வடகிழக்கில் வாழும் முஸ்லீம் மக்களாகிய நாம் சிறுபான்மை இனம் அல்ல ஒற்றுமையாக இருப்போமானால் எமது தேவைகளை உரிமைகளை மார்க்கத்தினை நாம்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் காத்துக்கொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் மன்னார் நகருக்கான குழு அமைக்கப்பட்டது.
நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் திரு உதுமான்லெப்ப, வடமாகாண அமைப்பாளர் திருமதி மௌலவியா ஜான்சி ராணி சலீம் மூத்த உறுப்பினர் திரு உதுமான் லெப்ப மற்றும் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் திரு. ரிஸான் ஆகியோருடன் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்
மன்னாருக்கு வருகைதந்த முன்னாள் அமைச்சசர் A.L.M.அதாவுல்லாஹ்....மன்னார் நகருக்கான குழு ஆரம்பம்......
Reviewed by Author
on
July 22, 2017
Rating:
No comments:
Post a Comment