அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் புதிய அலுவலகக்கட்டிடத்தை திறந்து வைத்தார் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன்-(படம்)

உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் வெளி விவகார மற்றும் வர்த்தகத் திணைக்கள நிதி உதவி மற்றும் வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் நிதிப்பங்களிப்புடன்,வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் 35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மன்னார் நகர சபையின் புதிய அலுவலகக்கட்டிடம் இன்று செவ்வாய்க்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.லெம்பேட் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்புவிழா நிகழ்வின் போது வடமாகாண முதலமைச்சரின் பிரதி நிதியாக கலந்து கொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுடன் இணைந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் முதலமைச்சரின் செயலாளர்,வடமாகாண சபை அதிகாரிகள்,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,திணைக்கள தலைவர்கள்,மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர்,உறுப்பினர்கள்,மற்றும் மன்னார் நகர சபை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.























மன்னார் நகர சபையின் புதிய அலுவலகக்கட்டிடத்தை திறந்து வைத்தார் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன்-(படம்) Reviewed by NEWMANNAR on July 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.