புதிதாக அமைக்கப்பட்ட பள்ளமடு-மகிலங்குளம் பிரதான வீதி வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(PHOTOS)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளமடு-மகிலங்குளம் பிரதான வீதியை அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் இணைந்து இன்று (1) சனிக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.
பள்ளமடு-மகிலங்குளம் பிரதான வீதி பாரிய குண்றும் குழியுமாக காணப்பட்டமையினால் குறித்த வீதியினால் பயணம் செய்யும் சன்னார்,ஈச்சலவக்கை,பெரியமடு ஆகிய கிராம மக்கள் தொடர்ச்சியாக பாதீக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் 11.4 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பள்ளமடு-மகிலங்குளம் பிரதான வீதி அமைக்கும் பணி கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் 455 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீதி அபிவிருத்தி பணிகள் அரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த வீதி அபிவிருத்தி பணிகள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முழுமை பெற்றது.
-இந்த நிலையில் குறித்த வீதியை மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று(1) சனிக்கிழமை காலை இடம் பெற்றது.
இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் இணைந்து குறித்த வீதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
-இதன் போது வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,மமைச்சரின் இணைப்பாளர்கள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பள்ளமடு-மகிலங்குளம் பிரதான வீதி பாரிய குண்றும் குழியுமாக காணப்பட்டமையினால் குறித்த வீதியினால் பயணம் செய்யும் சன்னார்,ஈச்சலவக்கை,பெரியமடு ஆகிய கிராம மக்கள் தொடர்ச்சியாக பாதீக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் 11.4 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பள்ளமடு-மகிலங்குளம் பிரதான வீதி அமைக்கும் பணி கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் 455 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீதி அபிவிருத்தி பணிகள் அரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த வீதி அபிவிருத்தி பணிகள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முழுமை பெற்றது.
-இந்த நிலையில் குறித்த வீதியை மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று(1) சனிக்கிழமை காலை இடம் பெற்றது.
இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் இணைந்து குறித்த வீதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
-இதன் போது வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,மமைச்சரின் இணைப்பாளர்கள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக அமைக்கப்பட்ட பள்ளமடு-மகிலங்குளம் பிரதான வீதி வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(PHOTOS)
Reviewed by NEWMANNAR
on
July 01, 2017
Rating:
No comments:
Post a Comment