அண்மைய செய்திகள்

recent
-

புவி வெப்பம், காற்று மாசு: உலக பருவநிலை அறிக்கையின் எச்சரிக்கை....


கடந்த 2016ஆம் ஆண்டு இதுவரையில்லாத அளவு சுற்றுசூழல் விடயத்தில் மிக மோசமாக இருந்துள்ளதாக உலக பருவநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பருவநிலை வெளியிட்டுள்ள அறிக்கையில், புவிவெப்பம், கடல்நீர் மட்டம், காற்றில் மாசு, வெப்பவாயு வெளியேற்றம் ஆகியவை கடந்த வருடம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா மற்றும் மெக்சிகோவில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

எரிபொருள்களை அதிகம் உபயோகப்படுத்துவதால் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வெப்ப வாயுக்களின் வெளியேற்றம் அபாயகரமாக அதிகரித்துள்ளது.

வளிமண்டலத்தில் இதுவரையில்லாத அளவு கரியமிலவாயுவின் அடைவு மில்லியனுக்கு 402.9 பகுதிகளாக தற்போது உயர்ந்துள்ளது.

பனிச்சிகரத்திலிருந்து பனி உருகுதல், பனிப்பாறைகள் அழிந்து பனி உருகுதல் ஆகியவற்றால் கடந்த ஆண்டில் கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவில் 3.25 அங்குலங்களாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1900ஆம் ஆண்டை ஒப்பிடும் போது துருவங்களில் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக சூறாவளிகள் கடந்த ஆண்டு உச்சத்தை தொட்டன. இதன் காரணமாக சுமார் 330 மில்லியன் மக்கள் குடிநீரின்றி தவித்ததோடு 300 பேர் வெப்பத்தால் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பம், காற்று மாசு: உலக பருவநிலை அறிக்கையின் எச்சரிக்கை.... Reviewed by Author on August 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.