மன்னார் நகர பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராய்வு.(Photos)
மன்னார் நகர பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதேச செயலாளர் என்.பரமதாஸன் அவர்களின் நெறிப்படுத்தலில் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் இன்று(3) வியாழக்கிழமை காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக மன்னார் நகர பிரதேசச் செயலாளர் பிரிவில் 2017 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பிலும்,அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மன்னார் நகர பிரதேசச் செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீதி, போக்குவரத்து, விவசாயம், கால்நடை, மீன்பிடி,குடி நீர்,சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் அவற்றில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மன்னார் நகர பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் இடம் பெற்ற பேதும் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் மண்டபத்தில் பயண்படுத்தப்பட்ட ஒலிவாங்கிகள் உரிய முறையில் செயற்படாமையினால் உரையாற்றியவர்களின் கருத்துக்களை உரிய முறையில் கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
மேலும் அழைக்கப்பட்ட திணைக்களத்தலைவர்களில் முக்கியமான துறைகளைச் சேர்ந்த திணைக்கள அதிகாரிகள் சமூகம் தராமை குறித்து இணைத்தலைவர்கள் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக மன்னார் நகர பிரதேசச் செயலாளர் பிரிவில் 2017 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பிலும்,அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மன்னார் நகர பிரதேசச் செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீதி, போக்குவரத்து, விவசாயம், கால்நடை, மீன்பிடி,குடி நீர்,சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் அவற்றில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மன்னார் நகர பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் இடம் பெற்ற பேதும் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் மண்டபத்தில் பயண்படுத்தப்பட்ட ஒலிவாங்கிகள் உரிய முறையில் செயற்படாமையினால் உரையாற்றியவர்களின் கருத்துக்களை உரிய முறையில் கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
மேலும் அழைக்கப்பட்ட திணைக்களத்தலைவர்களில் முக்கியமான துறைகளைச் சேர்ந்த திணைக்கள அதிகாரிகள் சமூகம் தராமை குறித்து இணைத்தலைவர்கள் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராய்வு.(Photos)
Reviewed by NEWMANNAR
on
August 03, 2017
Rating:
No comments:
Post a Comment