சம்பந்தன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை தேவையில்லை! - என்கிறார் விக்னேஸ்வரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும்வரை மாற்றுத் தலைமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்கியுள்ள செவ்வி ஒன்றில், ‘தமிழர் அரசியல் தரப்பில் தற்போது மாற்றுத் தலைமை வெற்றிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘இது ஒரு சிக்கலான கேள்வி. தமிழர் தலைமைப்பீடம் மக்கள் கருத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.தான்தோன்றித்தனமாக தாம் நினைப்பதே சரி என்று நினைத்து அதனைத் தமிழர்களிடம் திணிக்க முடியும் என்கின்ற தலைமைத்துவம் எந்தக் காலத்திலும் நன்மை தராது என்பது எனது தாழ்மையான கருத்து.தற்போது நாம் அனைவரும் சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி. இந்த 84 வயதிலும் மிகுந்த நினைவாற்றல் கொண்டவர். எங்கெங்கு என்ன நடந்தது எனக் கூறுவார். அவர் உயிருடன் இருக்கும்வரை மாற்றுத் தலைமைத்துவம் பற்றி கதைப்பது சரியாக இருக்காது’ என்று பதிலளித்தார்.
‘சம்பந்தன் அரசியல் தீர்வை மக்களுக்கு பெற்றுத்தருவார் என்பதில் நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்களா?’
‘எல்லோரும் பிரபாகரன் தமிழர்களுக்கானத் தீர்வைப் பெற்றுத்தருவார் என்று நம்பினார்கள். அவ்வாறு பெற்றுத்தந்தரா? இது இறைவனின் ஆணைப்படியே நடக்கும். சம்பந்தன் தருவாரோ, இல்லையோ எங்களுக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எல்லாம் அவன் செயல். இந்த விடயத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பெரும்பான்மை மக்களின் எண்ணங்கள், சிறுபான்மை மக்களின் எண்ணங்கள் போன்றவற்றை நாம் பார்க்க வேண்டும். சம்பந்தன் எடுத்துத் தருவாரா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலை இருக்கின்றது. அவர் இயன்ற அளவு முயற்சிகளை எடுத்து வருகின்றார்.அவரால் முடியும் முடியாது எனக் கூற முடியாத நிலை உள்ளது’ என்றார் விக்னேஸ்வரன்.
சம்பந்தன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை தேவையில்லை! - என்கிறார் விக்னேஸ்வரன்
Reviewed by Author
on
September 14, 2017
Rating:
No comments:
Post a Comment