முரளியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாம்.!
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு சூட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக முரளிதரனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கண்டி மல்வத்து மாநாயக்க தேரரிடம் முரளிதரனின் தந்தை சின்னையா முத்தையா கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
நேற்று மல்வத்து மாநாயக்க தேரரை சந்தித்த முத்தையா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக உடனடியாக விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்துவதாக தேரர் உறுதியளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முரளியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாம்.!
Reviewed by Author
on
September 14, 2017
Rating:
No comments:
Post a Comment