அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் உள்ளவர்கள் சிறந்த முறையில் உயிர்வாழ உதவும் இலங்கை பெண்கள்!


இலங்கை பெண்களால் லண்டனில் நடத்திச் செல்லப்படும் பிரபல உணவகம் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

லண்டனில் Papi’s Pickles என்ற உணவகம் இயங்கி வருகின்றது. இங்கு இலங்கை மற்றும் தென்னிந்திய உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரித்தானியாவுக்கு புகலிடம் கோரிச் சென்ற தமிழ் பெண்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.

2014 ஆம் ஆண்டில் அபி ரமணன் என்ற பெண்ணினால் இந்த உணவகம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு வித்தியாசமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. லண்டனில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு இலங்கை மற்றும் தென்னிந்திய உணவுகள் வழங்கப்படுகின்றது.


இலங்கையை விட்டு வெளியேறிய பெண்களால் அங்கு உணவு தயாரிக்கப்படுகின்ற நிலையில், அதன் மூலமான வருமானங்களால் அவர்களின் வாழ்க்கை நிலை மாறி விடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தின் மூலம், பெண்களுக்கு லண்டன் வாழ்க்கை ஊதியம், பயிற்சி மற்றும் ஆதரவுகளை பெற முடியும். பின்னர், அவர்கள் அனைத்து இலாபங்களையும் மீண்டும் முதலீடு செய்கிறார்கள்.

ரமணன் தனது நிறுவனத்தைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் தகுதிகள் உள்ளதென்பதனை அவர் நம்புகின்றார்.



புலம்பெயர்ந்தோர்களுக்கு லண்டன் பிரதான நகரமாக மாறியுள்ளது. எனினும் புலம்பெயர்ந்தோர் கொண்டு வரும் பெரும் நிலைப்பாடுகள் போதுமானதாக இல்லை என கூறப்படுகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரமணன் 14 பெண்களுடன் பணி புரிந்து வந்தார். தற்போது அவர் நான்கு பகுதி நேர பயிற்சிப் பணியாளர்களுடன் பணியாற்றுகிறார்,

ரூபி, ராகினி, கிரிஷாந்தி மற்றும் இந்துமதி ஆகியோர் 1000 பவுண்ட் சம்பளத்துடன் 5,868 மணி நேரம் வேலை செய்து 5,000 மணி நேரம் பயிற்சி வழங்குகின்றனர்.



ஒரு குடிபெயர்ந்தவராகவும், ஒரு தமிழராகவும் இருக்கும் போது லண்டனில் தொழில் வாய்ப்பு பெற்று கொள்வதென்பது கடினம் என்பதனை ரமணன் அறிந்திருந்தார்.

ஆவணப்படம் தொடர்பில் ஆராயும் போதும், தொண்டு வேலைகளை மேற்கொள்ளும் போதும், அவர் பிரித்தானியாவில் பல இலங்கையர்களை சந்தித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சமூகங்களில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகமாக உள்ளது, குறிப்பாக பெண்களிடையேயும், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு என்பது செயல்பாட்டிற்கு முக்கியமானதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Papi's Picklesஇல் வேலை செய்யும் பெண்கள் ஒரு புதிய நாடு, புதிய கலாச்சாரம் மற்றும் புதிய மொழிக்கு மாற வேண்டிய நிலை காணப்பட்டது.

இருப்பினும், ரமணனின் தலைமை சமையல்காரர்களான ரதி மற்றும் ஷாந்தினி, தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் நன்கு அறிந்திருந்தார்கள்.

இது வேலையை எளிதாக்க உதவியது. எதிர்காலத்தில், அவர்களுக்கு ஆங்கிலம் மொழி வகுப்புகள் வழங்கும் நோக்கமும் காணப்படுவதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.








லண்டனில் உள்ளவர்கள் சிறந்த முறையில் உயிர்வாழ உதவும் இலங்கை பெண்கள்! Reviewed by Author on September 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.