அண்மைய செய்திகள்

recent
-

மறைக்கல்வி வாரத்தை சிறப்பிக்கும் வகையில மூன்றாம் பிட்டி கிராமத்தில் இடம் பெற்ற 'மறை கலை' நிகழ்வு

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மூன்றாம் பிட்டி கிராமத்தில் இவ் வருடத்திற்கான மறை கலை நிகழ்வு நேற்று(3) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மூன்றாம் பிட்டி குழந்தை யேசு ஆலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் இடம் பெற்றது.

-மறைக்கல்வி வாரத்தை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற மறை கலை நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சிறப்பு விருந்தினராக வேப்பங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை ஏ.லக்ஸ்ரன் டீ சில்வா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

-அதன் போது சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு பரிசலிப்பு நிகழ்வும் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





















மறைக்கல்வி வாரத்தை சிறப்பிக்கும் வகையில மூன்றாம் பிட்டி கிராமத்தில் இடம் பெற்ற 'மறை கலை' நிகழ்வு Reviewed by NEWMANNAR on September 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.