டெல்லியில் தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்
டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் பங்கேற்றுள்ள விவசாயிகள் தினமும் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளின் இந்த போராட்டம் 61-வது நாளாக நேற்று நடைபெற்றது. அப்போது விவசாயிகள் பிச்சை எடுத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘மோடியே மோடியே எங்களை பிச்சை எடுக்க வைத்து விட்டாயே’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்
Reviewed by Author
on
September 15, 2017
Rating:
No comments:
Post a Comment