அண்மைய செய்திகள்

recent
-

போர்க்குற்றம் சுமத்தப்பட்ட, 25 இராணுவ அதிகாரிகளைக், கைது செய்யக் கோரிக்கை !

போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட, 25 இராணுவ அதிகாரிகளை, கைது செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றம் சுமத்தப்பட்ட, 25 இராணுவ அதிகாரிகளைக், கைது செய்யக் கோரிக்கை !

குறித்த 25 இராணுவ அதிகாரிகளும், வெளிநாட்டு விஜயங்களில் ஈடுபட்டால், அவர்களை கைது செய்யுமாறு முன்னாள் ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சுகா சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் போலி அறிக்கை சமர்ப்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்திருந்த, ஐக்கிய நாடுகள் பிரதிநிதியின் கருத்தின் ஊடாக இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

30 ஐரோப்பிய நாடுகள் சர்வதேச உலக பேரவையில் கையொப்பமிட்டுள்ளது. அது ரோம பேரவைக்கு வெளியே உள்ள சட்டமாகும்.

இவ்வாறு போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, 25 இராணுவத்தினரில் 6 பேர் மேஜர் ஜெனரல்களாகும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
போர்க்குற்றம் சுமத்தப்பட்ட, 25 இராணுவ அதிகாரிகளைக், கைது செய்யக் கோரிக்கை ! Reviewed by NEWMANNAR on October 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.