அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் மைத்திரி வழங்கிய உறுதிமொழி!


காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்தன் பின்னர் உரையாற்றுகையில் இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்த பின்னர் கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள பால் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக கடந்த 237 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக காத்திருந்தனர்.விற்பனை நிலையத்தினை திறந்து வைக்க வருகை தந்த ஜனாதிபதி வீதியில் நின்ற மக்களை சந்தித்து அவர்களுக்கு நட்புறவுடன் கலந்துரையாடினார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கொழும்பிற்கு கூட்டிச்சென்று அங்கு கலந்துரையாடுவதற்கு அங்கு வாகன வசதி ஏற்படுத்தி தருவதாக குறிப்பிட்டார்.<காணாமல் போனவர்கள் மறைத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற இடங்களை சென்று பார்வையிடுவதற்கும் தான் முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார்.இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேரடியாக மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.


கிளிநொச்சியில் மைத்திரி வழங்கிய உறுதிமொழி! Reviewed by Author on October 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.