அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேல் நீர்ப்பட்டியல் நிலுவைத்தொகை காணப்பட்டால் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன் முழுத்தொகையினையும் செலுத்தி நீர்த்துண்டிப்பினை தவிர்த்துக்கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை நீர் பாவனையாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கியுள்ளனர்.

-எதிர்வரும் 13 ஆம் திகதி மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் தங்களின் இடங்களுக்கு வரும் போது ஒரு மாதத்திற்கு மேல் தங்களின் நிலுவைத்தொகை காணப்பட்டால் நீர்த்துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.

-மீண்டும் இணைப்பை பெற்றுக்கொள்ள முழுப்பணம் மற்றும் தண்டப்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

-எனவே எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் நிலுவைத்தொகையினை செலுத்து நீர் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி நீர் பாவனையாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-மன்னார் நிருபர்-
(4-11-2017)

-
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு தொடர்பான அறிவித்தல். Reviewed by NEWMANNAR on November 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.