அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் ஒரு வருடப்பூர்த்தியும் வாகை சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது....

 மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் ஒரு வருடப்பூர்த்தியும் வாகை சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இவ்விழாவில்
  • 2017 புலமைப்பரீட்சையில் திறமைசித்தியடைந்த  மாணவமாணவிகள்-170 கௌரவிப்பு
  • சாதனை நாயகர்கள் 06 கௌரவிப்பு
  • சித்திரப்போட்டியில்  வெற்றிபெற்ற மாணவமாணவிகள்  03 பணபரிசிலும் சான்றிதழ் வழங்கி வைப்பு
மன்னார் மண்ணின் பெருமை பேசுகின்ற வாகை சஞ்சிகை வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வினில் 
  • பிரதம விருந்தினர்களாகவும்
    • சிறப்பு விருந்தினர்களாகவும்
    • கௌரவ விருந்தினர்களாகவும் 
கலந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கு நினைவு விருதுகளும் வழங்கி வைத்ததோடு கண்ணுக்கினிய நடனத்தினை பரதகலாலயா நாட்டிய பள்ளிமாணவிகள் வழங்க நிகழ்ச்சித்தொகுப்பினை J.J.பெல்டானோ அவர்களும்  S.A.உதயன் தேசியக்கலைஞர் அவர்களும் வழங்கியிருந்தனர்.

 விருந்தினர்கள் உரையின் சாரம்சம்
மன்னார் மண்ணில் இப்படியான நிகழ்வுகள் தற்பொழுது நடைபெற்றுவருவது மகிழ்ச்சிக்குரிய விடையம் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் தங்களது ஒருவருடப்பூர்த்தியில் 2017ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவமாணவிகளை கௌரவிப்பும் சாதனையாளர் கௌரவிப்பும்  அத்துடன் வாகை சஞ்சிகை வெளியீடும்  நிகழ்வானது பாராட்டுக்குரியது இவ்வமைப்பினர் மன்னாரின் எழுச்சி அதுவே எங்களின் முயற்ச்சி கையெழுத்துப்பதிவு ஒன்றை மேற்கொண்டனர்  இவ்வாறாக மன்னாரினது மாணவர்களினதும் வளர்ச்சியிலும் எழுச்சியிலும் அக்கறையுடன் செயற்படுவது வரவேற்கத்தக்கதும் பாராட்டுக்குரியதுமாகும் இவ்வமைப்பினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்





















































































































மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் ஒரு வருடப்பூர்த்தியும் வாகை சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.... Reviewed by Author on November 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.