அண்மைய செய்திகள்

recent
-

வங்காளதேசத்தில் ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு -


வங்கதேசத்தில் போர் குற்ற வழக்கில் ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் வங்கதேசத்தில் ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதுதொடர்பான போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இங்கு நடந்து வரும் வழக்குகளில் மரண தண்டனை உட்பட பல ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை சேர்ந்த ஆறு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது, அதாவது பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக இருந்ததுடன் அப்பாவி மக்கள் பலியாக காரணமாக இருந்தனர்.
இந்த வழக்கில் ஆறு பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு - Reviewed by Author on November 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.