அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் -

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ள நிலையில் எடுத்துக் காட்டான விடயமொன்றை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்று கொள்வதற்காக மாவட்ட செயலகத்திற்கு சென்றுள்ளார்.

இவ்வாறு அவர் செல்வதற்காக அரச வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தான் பதவி ஏற்பதற்கு முன்பு இவ்வாறு அரச வாகனத்தில் செல்வது தவறு என தெரிவித்து மிகவும் எளிமையான முறையில் மாவட்ட செயலகத்தை சென்றடைந்துள்ளார். இவரின் இந்த செயற்பாடானது அரச ஏற்பாட்டுடன் வந்த வாகன சாரதிக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன், அரச சொத்துக்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவத்தினை அனைவரும் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் மதத்தலைவர்களிடம் சென்று அவர் ஆசி பெற்றுள்ள நிலையில் அவர்களின் நன்மதிப்பையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் - Reviewed by Author on November 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.