அண்மைய செய்திகள்

recent
-

அதிகாரங்களை பகிர சிங்களவர் விரும்பவில்லை இன முரண்பாட்டுக்கு இதுவே காரணம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்


ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக்கொண்ட அதிகாரங் களை தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள தலைவர்கள் பகிர்ந்துகொள்ள மறுப்பதே இன்றைய இன முரண்பாட் டுக்கான காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும்போது கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆங்கிலேயர் வெளியேறும்போது சிறு பான்மையினரை நீதியாக, நேர்மையாக, சுயகௌரவத்துடன் அவர்கள் வாழ வழி வகுப்பார்கள் என்று கருதியே சிங்கள அரசி யல் தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைத் துச் சென்றார்கள். வெள்ளையர்கள் செல்லும் வரையில் நல்லவர்கள்போல் நடித்து அதி காரம் அவர்கள் கைகளுக்கு வந்தவுடன் சிங் கள மக்கட் தலைவர்கள் தமது சுயரூபத்தை வெளிக்காட்டி விட்டார்கள். சோல்பரி பிரபு  சுதந் திரம் அளித்து பத்துப் பன்னிரண்டு வருடங் களுக்குப் பின்னர் டீ.ர்ஃபார்மர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சிங்கள மக்கட் தலைவர் கள் இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதி ராக நடப்பார்கள் என்று அறிந்திருந்தால் ஒரு சமஷ்டி அரசையே தந்துவிட்டுச் சென்றி ருக்கலாம் என்று அங்கலாய்த்தார்.

எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல்வாதிகள் நாடு பூராவுக்குமான அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே. உதா ரணத்திற்கு வட கிழக்கில் தமிழ்மொழி காலாதி காலமாகப் பேசப்பட்டு வந்த போதும் 1956ஆம் ஆண்டில் “சிங்களம் மட்டும்” சட்டமானது வடக்கையும் கிழக்கையும் மற் றைய ஏழு மாகாணங்களுடன் இணைத்து முழு நாட்டுக்கும் ஒரே மொழி என்று சட்டம் இயற்றியது. தமிழ் மக்கட் தலைவர்கள் இதனை எதிர்க்கப்போக அவர்களுடன் உடன்பாடுகள் செய்து வட கிழக்கில் உள்ள வர்கள் பெறவேண்டிய உரித்துக்களைக் கையளிப்பதாகக் கூறிவிட்டு உடன்படிக்கை களைச் செல்லாக் காசாக்கினர். இன்று இந்த நாட்டில் நிலவும் ஒரேயொரு பிரச்சினை பெரும்பான்மையினர் தாம் ஏதோ வழியில் ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அதிகாரங்களை மற்றைய இனங்களுடன், குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள மறுத்து வருவதே. எல்லாப் பெரும்பான்மையினக் கட்சிகளின் சிங்களத் தலைவர்களும் கட்சி பேதமின்றி சிங்களப் பெரும்பான்மையினர் பெற்றுக் கொண்ட அதிகாரம் வேறெவருடனும் பகிர்ந்து கொள் ளப்படாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டே உள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக் கொடுக்க முன்வந்தவர்கள் புலிகள் அழிந்ததும் பழைய நிலைக்கே மாறி விட்டார்கள். எனவே ராஜபக்ஷ புதிதாக எதை யும் கூற வரவில்லை. பிரச்சினைகள் வரும் போது அதிகாரப் பகிர்வுகள் பற்றிப் பேசும் சிங்கள அரசியல் தலைவர்கள் பிரச்சினை கள் ஓரளவு தணிந்ததும் பழைய நிலைக்கே சென்று விடுகின்றார்கள். அதிகாரப் பகிர்வு பற்றி எந்த வித மனமாற்றமும் அவர்களி டையே ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.

அதிகாரப் பகிர்வு பற்றி மகிந்த ராஜபக்ஷ  கூறிவருகின்றார். அதாவது அவர் குறிப்பிடு வது ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப் பகிர்வே. கிட்டத்தட்ட 13ஆவது திருத்தச் சட் டத்தை ஒட்டிய மீளாய்வு செய்யப்பட்ட அதி காரப் பகிர்வையே அவர் எதிர்க்கின்றார். இவர்தான் போர் முடிந்ததும் 13 + என்று கூறியிருந்தார். இப்பொழுது அதிகாரப்பகிர்வு வேண்டாம் என்கின்றார். இந்தியாவில் சென்று இலங்கையில் பௌத்தம் முதலிடம் பெறாவிட் டால் பௌத்தம் அழிந்துவிடும் என்ற விதத் தில் பேசியுள்ளார். அவர் கூறுவது பௌத் தம் பற்றியல்ல. சிங்கள ஆதிக்கம் பற்றியே என்பதை நாம் உணர வேண்டும். இலங் கையில் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்கள் சிங்களவரே. ஆகவே பௌத்தத்திற்கு முத லிடம் கோருபவர்கள் சிங்களவருக்கே முத லிடம் கோருகின்றார்கள். அதாவது பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும். தமிழர்கள், முஸ்லிம்கள் இரண் டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடு வார்கள் என்பதே எதிர்பார்ப்பு. இந்து, கிறிஸ் தவத் தமிழரும் முஸ்லிம்களும் எக்காலத் திலும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கு வதை ஏற்கக்கூடாது. ஏற்றால் நாம் இரண் டாந்தரப் பிரஜைகள் ஆகிவிடுவோம். பெரும் பான்மையினர் அரசாளும்போது பெரும் பான்மையினர் மதத்திற்கு முன்னுரிமை கேட்பது மதத்திற்குப் பங்கம் வரும் என்ப தற்காக அல்ல. மதத்தைக் காரணம் காட்டி சிறுபான்மையினரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே கார ணத்திற்காகத்தான்.

மகிந்த ராஜபக்ஷ கூறிய கருத்தைப் பற்றி என்னுடைய கருத்தைக் கேட்டீர்களானால் நானும் மகிந்த ராஜபக்ஷ செப்புவதையே கூறு வேன். அதாவது ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று அவரோடு சேர்ந்து கூறிவிட்டு அதே மூச்சில் சமஷ்டி அரசியல் யாப்பே எமக்கு அவசியம் என்பேன். ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் துய ரங்களைத் துடைக்க உதவாது. மீண்டும் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தின் கீழ் நாம் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து போராட வேண்டிய நிலையே ஏற்படும். சுயகௌர வத்துடன் வாழத்துடிக்கும் எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தின் ஆதிக்கக் கெடுபிடி களுக்கு அடிமைப்பட்டு வாழ அனுமதி தெரி விக்க மாட்டார்கள். ஒரேவிதமான மக்கட் கூட்டங்கள் இடையேதான் ஜனநாயகம் பெரும்பான்மையினரின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றது. பல்லின, பல்மத, பன்மொழி மக்களைப் பொறுத்த வரையில் யாவரும் சம உரித்துக் கொண்டவர்கள் என்ற அடிப் படையில் அவர்கள் யாவரதும் அடிப்படை உரி மைகளை வழங்கிய பின்னரே மற்றவற் றைப் பற்றிச் சிந்திக்கின்றது.

மேலும் சில விடயங்களை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஊன்றியாராய்ந்து அவற் றிற்கான ஆக்கபூர்வமான தீர்வுகளைப் பெற்றுத்தர பெரும்பான்மையினப் பெருங் கட்சிகள் என்றென்றும் பின்னின்றே வந்துள் ளன. ஓரளவு ஏற்புடையதான ஒரு தீர்வை சந்திரிகா அம்மையார் கொண்டு வந்த போது அதன் வரைவை ஐ.தே.கட்சியினர் பாராளுமன்றத்தில் எரித்துப் போட்டனர். இனி அவ்வாறான ஒரு தீர்வைக் கொண்டு வர மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். அப் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து அவர்கள் அந்தத் தீர்வுத் திட்டத்தை 2000 ஆம் ஆண்டு முன்வைத்தார்கள்.

இனி முற்றுமுழுதான சிங்கள ஆதிக்கத் தின் கீழ் ஒரு சில சலுகைகளை ஒற்றை யாட்சியின் கீழ்; தருவது போலத்தான் தீர்வு வரைபுகள் இருப்பன. ஆகவேதான் நான் கூறுகின்றேன் ராஜபக்ஷமார் தமது அரசிய லுக்கும் இன ரீதியான சிந்தனைக்கும் ஏற் பவே இவ்வாறு கூறுகின்றார்கள். அடுத்த தேர்தலின் வெற்றியே அவர்களின் ஒரே யொரு குறிக்கோள். அவர் அவ்வாறு கூறு கின்றார் என்று அவருடன் முரண்பட்டு பாரா ளுமன்றத்தில் அடிபட்டுப் பேச்சுப்பட்டு இந்த அரசாங்கம் அரையும் குறையுமான ஏதோ ஒரு வகையான ஒற்றையாட்சி அதிகாரப் பகிர்வினை நல்குவதால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. சிங்கள அரசியல் தலைவர்களின் ஆதிக்கம் எம்மை விட்டு நீங்க வேண்டுமானால், எம்மிடம் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் பெரும் பான்மையினத் தலைவர்கள் எதை எதையோ கூறி ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட அதிகாரங் கள் மீண்டும் எம்முடன் பகிரப்பட வேண்டு மானால், அதற்கு உண்மையான அதிகாரப் பகிர்வொன்றே தீர்வாகும். அவ்வாறான தீர்வு சமஷ்டி அரசியல் யாப்பு ஒன்றின் கீழேயே கிடைக்கும். ராஜபக்ஷ போன்றவர்கள் வெறும் அரசியல்வாதிகள். அவர்களுக்கு அடுத்த தேர்தலே முக்கியம். நாட்டின் ஐக்கியமும் நல் லிணக்கமும் வருங்காலச் சுபீட்சமும் ஒரு பொருட்டல்ல.

தற்போதைய சிங்கள  அரசியல்த் தலை வர்கள் தமது குற்றமுள்ள நெஞ்சை ஆசு வாசப்படுத்த தமிழர்களுக்கு ஏதாவது கொடு க்க வேண்டும் என்று நினைத்து முன்மொழி வுகளை முன்வைக்கக் கூடும். அவர்கள் தருவதானது அவர்களால் தருவதாக அமை யட்டும். எம்மைப் பொறுத்த வரையில் இந் நாட்டின் இனப் பிரச்சினை நிரந்தரமாகத் தீரவேண்டுமானால் 1949ஆம் ஆண்டி லிருந்து எமது அரசியல் தலைவர்கள் வலி யுறுத்தி வரும் சமஷ்டி அரசியல் யாப்பே எமக்கு ஓரளவாவது நன்மைபயப்பதாய் அமையும் எனத் தெரிவித்தார்.
அதிகாரங்களை பகிர சிங்களவர் விரும்பவில்லை இன முரண்பாட்டுக்கு இதுவே காரணம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் Reviewed by Author on November 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.