அண்மைய செய்திகள்

recent
-

நாடு கடத்தவுள்ள இலங்கை குடும்பத்தினருக்கு ஆதரவாக போராடும் நியூஸிலாந்து எம்.பிமார் -


நியூஸிலாந்தில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை குடும்பத்தின் தந்தைக்கு ஒரு தற்காலிக தொழில் விசா ஒன்றை வழங்குமாறு நியூஸிலாந்து குடிவரவுத்துறை அமைச்சரிடம் குல்தா சௌத்லேண்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹமிஸ் வொல்கர் கடிதம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.
அந்நாட்டு ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
குயின்ஸ்டவுனை தளமாககக் கொண்ட அந்த குடும்பத்தை நியூஸிலாந்தில் தங்க வைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தால், வழக்கொன்றைப் பதிவு செய்யவுள்ளதாக மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் பெட்டர்சன் தெரிவித்துள்ளார்.

தினேஸா அமரசிங்க மற்றும் அவரது கணவர் ஷாம் மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகள் ஆகியோர் இன்னும் நான்கு நாட்களில் அதாவது எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் சார்பில் மனிதாபிமான அடிப்படையில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய நியூஸிலாந்தின் குடிவரவு சட்டத்தரணி ஷேன் ரொபின்சன் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த அனைத்து வழிமுறைகளும் தோல்வி கண்டால், குடிவரவு அமைச்சரின் தலையீடே அந்தக் குடும்பத்தின் ஒரே நம்பிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என நியூஸிலாந்து ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
நாடு கடத்தவுள்ள இலங்கை குடும்பத்தினருக்கு ஆதரவாக போராடும் நியூஸிலாந்து எம்.பிமார் - Reviewed by Author on November 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.