விஷப்பாம்பு கடித்து விட்டதா? அறிந்து கொள்வது எப்படி?
அதுமட்டுமில்லாமல், பாம்பு கடித்ததை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி தெரிந்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.
பாம்பு கடித்ததை எப்படி கண்டறிவது?
பாம்பு கடித்த இடத்தில், இரண்டு பற்களின் அடையாளம் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்திருக்கும். அந்த இடம் சற்று வீங்கி கடுமையான வலி ஏற்பட்டிருக்கும்.இந்த அறிகுறி இருந்தால், அது விஷப்பாம்புக் கடியாகத் தான் இருக்கும். கடித்த இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பற்கள் வரிசையாகப் பதிந்து காணப்பட்டால், அந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.
பாம்பு கடித்தவருக்கு எப்படி முதலுதவி செய்வது?
- பாம்பு கடித்தவரை நடக்கவோ, ஓடவோ செய்ய விடாமல், படுக்க வைக்க வேண்டும். ஏனென்றால், உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்து, கடித்த பாம்பின் விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவி விடும்.
- பாம்பு கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தைச் சுத்தமான நீரால் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.
- கடித்த பகுதியிலிருந்து, சற்று உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதாவது ஒன்றைக் கட்ட வேண்டும்.
- கட்டும் போது இறுக்கமாக இல்லாமல், இரண்டு விரல் நுழையும் அளவுக்கு இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.
விஷப்பாம்பு கடித்து விட்டதா? அறிந்து கொள்வது எப்படி?
Reviewed by Author
on
November 16, 2017
Rating:
No comments:
Post a Comment