ஆரம்பமாகியது மாவீரர் வாரம்: யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டது தீபம் -
மாவீரர்கள் வாரம் இன்று ஆரம்பமாகும் நிலையில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர்கள் நினைவிடத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தேசத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இந்த தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழர்களின் உரிமைக்காக, தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் பிரதான நிகழ்வுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமாகியது மாவீரர் வாரம்: யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டது தீபம் -
Reviewed by Author
on
November 21, 2017
Rating:
No comments:
Post a Comment