அண்மைய செய்திகள்

recent
-

ஐந்தாவது இடத்தில் இலங்கை?


சூழல் மாசடைகின்ற நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
சூழல் மாசடைகின்ற நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருக்கின்றார்.

அந்த வகையில் எமது நாட்டில் சூழலை மிகவும் துரிதப் போக்கில் மாசடையச் செய்கின்ற காரணிகளைக் கொண்ட மாகாணங்களில் வட மாகாணமே முதன்மை வகிக்கின்றதொரு நிலைமை காணப்படுகின்றது.
நாளாந்த தமிழ் ஊடகங்களைப் பார்க்கின்ற போது, வடக்கில் சூழலுக்கு பாதகம் ஏற்படுத்துகின்ற ஓரிரு செய்திகளையாவது காணக்கூடிய அளவிற்கு நிலைமை மோசமடைந்து வருவதையே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இது, இந்த அரசின் தவறா? அரச அதிகாரிகளின் தவறா? அல்லது எமது மக்கள் தெரிவு செய்திருக்கின்ற அரசியல் பிரதிநிதிகளின் தவறா? அல்லது எமது மக்களின் துரதிஸ்டவசமான நிலைமையா? என்றே கேட்கத் தோன்றுகின்றது என தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது இடத்தில் இலங்கை? Reviewed by Author on November 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.