வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் முஸ்ஸிம் பெண்ணோருவர் கைது
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (18.11.2017) காலை 9.30மணியளவில் 2.கிலோ 32கிராம் கேரளா கஞ்சாவுடன் முல்லைத்தீவை சேர்ந்த பெண்ணோருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவிலிருந்து புத்தளம் நோக்கி இ.போ.ச பேரூந்தில் 2கிலோ 32கிராம் கேரளா கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு, முள்ளியவலையைச் சேர்ந்த 42 வயதுடைய அப்துல் கசின் சிதாய்யா என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதைவேளை இன்றையதினம் அதிகாலை 12.15மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் 10கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் கொடிகாமத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை மாலதீபன் (வயது – 33) என்பவரை வவுனியா பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் முஸ்ஸிம் பெண்ணோருவர் கைது
Reviewed by Author
on
November 18, 2017
Rating:
No comments:
Post a Comment