மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் மாணவன் A.டெல்சியஸ் கலைப்பிரிவில் 01 ம் இடம்...
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை இணையத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளுக்கமைய
மன்னார் மாவட்டத்தின் மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் மாணவன் A.டெல்சியஸ் கலைப்பிரிவில் 01 ம் இடத்தினை மாவட்ட ரீதியில் பெற்றுள்ளார். இவர் நானாட்டானை சேர்ந்த அருள்பிரகாசம் மேரிஜோசப்பின் தம்பதிகளின் புதல்வர்
மாவட்ட ரீதியில் கலைப்பிரிவில் 01ம் இடம் பெற்ற குருமட மாணவன் செல்வன் A.டெல்சியஸிடம் எதிர்கால இலக்கு என்று வினவியபோது...
குருமட மாணவனா தனது சேவையானது அருட்பணி ஆற்றுவதோடு கல்வியில் மிளிர்ந்து மக்களுக்காக இறைப்பணியில் இணைந்திருப்பதே....
அத்துடன் தான் இந்நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள் குருமடத்தின் அருட்தந்தையர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் தான்.
செல்வன் A.டெல்சியஸ் மாணவன் ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர் குருமடத்தின் அருட்தந்தையர்கள் அனைவரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
ஏனைய பரீட்சை முடிவுகளை உடனுக்குடன் நியூமன்னார் இணையத்தில் எதிர்பாருங்கள்...
தொகுப்பு- வை-கஜேந்திரன்-
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் மாணவன் A.டெல்சியஸ் கலைப்பிரிவில் 01 ம் இடம்...
Reviewed by Author
on
December 30, 2017
Rating:
No comments:
Post a Comment