அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தெளிவூட்டும் விசேட கலந்துரையாடல்-(படம்)

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தெளிவூட்டும் விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை 04-12-2017 காலை மன்னார் பிரஜைகள் குழுவில் இடம் பெற்றது.

-சமாதானத்திற்கான புதிய உதையும் மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த கலந்துரையாடலில் சமூக மட்டத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் சிரேஸ்ட ஆய்வாளர் லயனல் குருகே,மாற்றுக்கொள்கை நிலையத்தின் வடக்கு,கிழக்கு மாகாண இணைப்பாளர் சுரேஸ் குமார், சமாதானத்திற்கான புதிய உதையம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எமில் றொமில்டன் உற்பட பிராந்திய ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 








மன்னாரில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தெளிவூட்டும் விசேட கலந்துரையாடல்-(படம்) Reviewed by Author on December 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.