உள்ளூராட்சி சபைத் தேர்தலில்.......முடிவெடுத்தது ரெலோ!!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற முடிவினை ரெலோ எடுத்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீடு தொடர்பிலான மூன்றாவது கட்டக் கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது.
குறித்த சந்திப்பில் தமிழரசுக்கட்சி விட்டுக்கொடுப்பற்ற போக்கினை கடைப்பிடித்ததால் ரெலோவும் புளொட்டும் அதிர்ப்தியுடன் வெளியேறியிருந்தன. இந்த நிலையில் இரவு ரெலோவின் முக்கியஸ்தர்கள் 16 பேர் மேற்கொண்ட அவசர சந்திப்பின் அடிப்படையில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக ரெலோ கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இருப்பினும் புளொட் கட்சி இன்னமும் முடிவினை அறிவிக்கவில்லை என தெரியவருகிறது. ஏற்கனவே ஈபிஆர்எல்எப் சுரேஷ் அணி தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பில் தமிழரசுக்கட்சி விட்டுக்கொடுப்பற்ற போக்கினை கடைப்பிடித்ததால் ரெலோவும் புளொட்டும் அதிர்ப்தியுடன் வெளியேறியிருந்தன. இந்த நிலையில் இரவு ரெலோவின் முக்கியஸ்தர்கள் 16 பேர் மேற்கொண்ட அவசர சந்திப்பின் அடிப்படையில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக ரெலோ கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இருப்பினும் புளொட் கட்சி இன்னமும் முடிவினை அறிவிக்கவில்லை என தெரியவருகிறது. ஏற்கனவே ஈபிஆர்எல்எப் சுரேஷ் அணி தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில்.......முடிவெடுத்தது ரெலோ!!
Reviewed by Author
on
December 06, 2017
Rating:
No comments:
Post a Comment