அண்மைய செய்திகள்

recent
-

பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிக்கு 4 மரண தண்டனை விதிப்பு -


பாகிஸ்தானில் 7 வயது சிறுமி கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் வசித்துவந்த தம்பதியரின் 7 வயது மகளான Zainab-ஐ லாகூர் அருகே உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கி கல்வி பயிலும்படி பெற்றோர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.

அதன்படி தன் உறவினர் வீட்டிலிருந்து கடந்த ஜனவரி 5-ஆம் திகதி மத பாடசாலைக்கு சென்ற Zainab மாயமானார்.
அது குறித்து சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் உதவியோடு இம்ரான் (23) என்ற இளைஞரை பொலிசார் கைது செய்திருந்த நிலையில் 9-ஆம் திகதியன்று சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் கைதான குறித்த நபருக்கு சர்வதேச ஆபாச திரைப்பட குழுவினருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் பாகிஸ்தான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இம்ரானுக்கு 4 மரண தண்டனைகள் மற்றும் 10 லட்சம் அபராதம் விதித்து லாகூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் இம்ரானுக்கு பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஒருவருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையிலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிக்கு 4 மரண தண்டனை விதிப்பு - Reviewed by Author on February 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.