அண்மைய செய்திகள்

recent
-

என் குழந்தையை நான் கொன்றுவிட்டேன்: சிரித்துக் கொண்டே கூறிய தாய் -


பிரித்தானியாவில் பெற்ற குழந்தையை கொன்றுவிட்டு அதை சிரித்து கொண்டே சமூக சேவகியிடம் கூறிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேல்ஸை சேர்ந்தவர் ஹன்னா டர்டள் (22), இவர் கடந்தாண்டு யூன் மாதம் தனது குழந்தை ஜேம்ஸின் முகத்தில் கை வைத்து வேகமாக அழுத்தியுள்ளார்.
இதில் மூச்சுத்திணறி ஜேம்ஸ் பரிதாபமாக உயிரிழந்தான், இதையடுத்து பொலிசார் ஹன்னாவை கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தான் தவறு ஏதும் செய்யவில்லை எனவும், சாதாரணமாக ஜேம்ஸின் முகத்திலும், வாயிலும் கை வைத்து அழுத்தியதாகவும் அப்போது அவன் மூச்சு விடுவது திடீரென நின்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிளர் ஓஹாகன் என்ற சமூக சேவகி இவ்வழக்கு சம்மந்தமாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், ஹன்னா தனது மகனை கொலை செய்துவிட்டு, தன்னிடம் வந்து எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி அதை சிரித்து கொண்டே கூறியதாக தெரிவித்துள்ளார்.
தனது கணவர் இயன் ஹூஜஸ் மற்றும் மாமியார் காத்லீன் மீது ஏற்பட்ட வருத்தத்தால் ஹன்னா மன அழுத்த பிரச்சனையால் தவித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஹன்னா மீதான நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

என் குழந்தையை நான் கொன்றுவிட்டேன்: சிரித்துக் கொண்டே கூறிய தாய் - Reviewed by Author on February 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.