அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் வெளிநாட்டிலிருந்து வந்து நான்கு தினங்களில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்....


வவுனியாவில் வெளிநாட்டிலிருந்து வந்து நான்கு தினங்களில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வவுனியாவில் வெளிநாட்டிலிருந்து வந்த நான்கு தினங்களில் தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன் காதல் விவகாரமே காரணம் என உறவினர்கள் தெரிவிப்பு

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வெளிநாடு ஒன்றிலிருந்து வந்து நான்கு தினங்களில் இன்று பிற்பகல் இளைஞர் ஒருவர் இன்று தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இன்று பிற்பகல் வவனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னரே சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ம. மயூரன் 30வயதுடைய இளைஞன் ஒருவர் உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளதாகவும்

 அப் பெண்ணிற்கு அரச வேலை கிடைத்துள்ளதுடன் குறித்த இளைஞனை கைவிட்டுள்ளதாகவும் இதனாலே மனம் உடைந்த இளைஞன் வீட்டில் தாயார் அறையில் படுத்திருந்தபோது வீட்டில் தூக்கில் தொங்கியுள்ள நிலையில் தாயார் வெளியே வந்தபோது இச்சம்பவத்தினை கண்டு அயலிலுள்ளவர்களின் உதவியுடன் வவனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வெளிநாட்டிலிருந்து வந்து நான்கு தினங்களில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.... Reviewed by Author on February 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.