அண்மைய செய்திகள்

recent
-

வங்கதேசத்தில் வீரநடை போட்ட இலங்கை: முதல் அணி என்ற பெருமை -


வங்கதேசத்தில் மூன்று தொடரை கைப்பற்றியுள்ள இலங்கை அணி, இந்தாண்டில் மூன்று தொடரையும் கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, அங்கு நடந்த முத்தரப்பு தொடர், டெஸ்ட் தொடர், டி20 தொடர் என மூன்று தொடரையும் கைப்பற்றி வீரநடை போட்டது.
கடந்த ஆண்டு 29 ஒரு நாள் போட்டிகளில் 23 தோல்விகளையும், 8 T-20 போட்டிகளில் தொடர் தோல்விகளையும் சந்தித்த இலங்கை அணி, ஒட்டுமொத்தமாக 40 சர்வதேச போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது.
இதனால் இலங்கை அணி தேர்வாளர்கள், வீரர்கள் என அனைவரும் கடும் விமர்சனத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், வங்கதேச தொடரில் இலங்கை அணி சாதித்து காட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த 2018-ஆம் ஆண்டில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 தொடர்களை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையையும் இலங்கை அணி பெற்றுள்ளது.
வங்கதேச தொடரில் வீரர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக செயல்பட்டதன் காரணமாகவே இதை சாதிக்க முடிந்தது என்று இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் வீரநடை போட்ட இலங்கை: முதல் அணி என்ற பெருமை - Reviewed by Author on February 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.