ஆறுமாவட்டங்களில் கடும் வறட்சி! மூன்று லட்சம் பேர் பாதிப்பு -
இலங்கையின் ஆறு மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் மூன்று லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
புத்தளம், குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, மன்னார் மற்றும் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளே இவ்வாறு வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் குறித்த மாவட்டங்களில் வாழும் 92 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறத்தில் வரட்சியான காலநிலை காரணமாக கடந்த நாட்களில் நீர்மின் நிலையங்களின் நீர்த்தேக்கங்களிலும் நீரின் அளவு கடுமையாக குறைந்து காணப்பட்டது.
அத்துடன் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தில் 22 வீதம் நீர் குறைந்து காணப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் அதன் அளவு மேலும் குறைவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆறுமாவட்டங்களில் கடும் வறட்சி! மூன்று லட்சம் பேர் பாதிப்பு -
Reviewed by Author
on
February 27, 2018
Rating:
No comments:
Post a Comment