அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் இளைஞர் மாநாடு விசேட செயலணி களத்தில்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மாபெ ரும் இளைஞர் மாநாடு ஒன்று மிக விரைவில் நடை பெறவுள்ளது. வடமாகாணத்து இளைஞர்களை  முதன்மைப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இளைஞர் மாநாடு ஒன்றை நடத்துவதற்கான விசேட செய லணி ஒன்றும் தமிழ் மக்கள் பேரவையால் உரு வாக்கப்பட்டுள்ளது.

ஊழல் அற்ற அரசியல் என்ற தொனிப்பொருளில் தமிழ் இளை ஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் இளைஞர் மாநாட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் இளைஞர்களை திசைமுகப் படுத்தும் விசேட உரையயான்றை ஆற்றவுள்ளார்.

தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தி  அதன் ஊடாக வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், தமிழ் பண்பாடு மற்றும் கலை, கலாசார விழுமியங்கள் என அனைத்து தளங்களிலும் இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான அத் தனை ஏற்பாடுகளும் திட்டமிட்டு வருவதாக பேரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின் றன.

இதேபோல வடக்கு மாகாணத்தில் நடைபெறும் இளைஞர் மாநாட்டைத் தொட ர்ந்து கிழக்கு மாகாணத்திலும் இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கான முத்தாய்ப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பேர வைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர் மாநாட்டுக்கான விசேட செய லணியில் மதத்தலைவர்களும் பங்கேற்று ள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் இளைஞர் மாநாடு விசேட செயலணி களத்தில் Reviewed by Author on April 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.