அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எமில் நகர் பூண்டிமாதா திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது...படங்கள்



மன்னார் எமில் நகர் பூண்டிமாதா வருடாந்த ஆலய கொடியேற்றம்  வியாழக்கிழமை மாலை 5-45 மணியளவில் அருட்தந்தை பீற்றர் மனோகரன் தலைமையில் பங்கு மக்கள் மறைபணியாளர்களுடன் இணைந்து பூண்டி அன்னையின் விழாக்கொடியினை  ஏற்றிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து  திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது  நவநாட்களில் நற்கருணை ஆசிர்வாதமும் திருப்பலியும் இடம்பெற்று  19 - 05- 2018 திருவிழாத்திருப்பலி  காலை 06 மணியளவில் செபஸ்தியார் பேராலயப்பங்குத்தந்தை பெப்பி சோசை அடிகளார் தலைமையில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள்  மறைபணியாளர்கள் பங்குமக்கள் அனைவரும் கலந்து கொள்ள திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
திருவிழாக்காலங்களில் திருச்செபமாலை இறைவார்த்தை பகிர்ந்த

அருட்சகோதரி செல்வராணி அமல உற்பவ கன்னியர் சபை
அருட்சகோதரி  கிறேஸ்மேரி திருக்குடும்ப கன்னியர் சபை
அருட்சகோதரி  ரூபராணி பிரான்சிக்கன் கன்னியர் சபை
அருட்தந்தை பீற்றர் மனோகரன்
அருட் தந்தை மரியகேன் பிரான்சிகன் சபை
வேசிப்பர் ஆராதனையை சிறப்பாக நடத்திய அருட்தந்தை கொடுதோர் அடிகளார்
திருவிழாத்திருப்பலியை பெப்பி சோசை அடிகளார் இவர்களுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குபற்றுதலுடன் சிறப்பாக  நடைபெற்ற திருவிழாத்திருப்பலி நிறைவில் புனித பூண்டி அன்னையவள் பக்தர்கள் நடுவே வீதியுலா வந்து மக்களுக்கு ஆசிவழங்கினாள்.
விசேட விதமாக வழமையாக பூண்டியன்னையின் திருச்சொருப ரதத்தினை பெண்கள் சுமந்து வருவது சிறப்பான விடையம்.

இவ்விழாவின் போது வடமாகண சபை உறுப்பினர் சட்டத்தரணி ப்பிறிமுஸ்சிறாய்வா அவர்கள் கோவிலுக்கு 50 கதிரைகளை வழங்கியிருந்தார்.

-வை.கஜேந்திரன்-

























மன்னார் எமில் நகர் பூண்டிமாதா திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது...படங்கள் Reviewed by Author on May 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.