அண்மைய செய்திகள்

recent
-

மருத்துவ மாணவர் உட்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது; நீடிக்கும் ஸ்டெர்லைட் ஆபத்து!


தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் 100வது நாள் போராட்டத்தின் போது, ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

அதில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். போராட்டம் தொடர்பாக ஆயிரக்கணக்காணோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கலில்ரகுமான் (வயது47), அவரது மகன்கள் முகமது அனாஸ் (22), முகமது இர்ஷாத் (20), கோட்டயன், சரவணன், வேல்முருகன் ஆகிய 6 பேர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர் உட்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது; நீடிக்கும் ஸ்டெர்லைட் ஆபத்து! Reviewed by Author on June 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.