அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் மீண்டும் புதிய நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்-படம்



 மன்னார் நகர நுழைவாயிலில்   உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித  எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று   (18) திங்கட்கிழமை 15 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் பெற்று மல்லாகம் நீதி மன்றத்திற்குச் சென்றுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு புதிய நீதிபதியாக ஹெப்பட்டிக்கொல்லாவ மாவட்ட நீதிபதி ரி.ஜெ.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி வியாழக்கிழமை இடை நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை (18) காலை 7.30 மணியளவில் 15 ஆவது தடவையாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது களனி  பல்கலைக்கழக 'தொல்பொருள்' அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவம்,களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா   குழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்; என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.தொடர்ச்சியாக அகழ்வு பணிகளின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றது.

இன்று திங்கட்கிழமை (18) மாலை 4.45 மணியளவில் மன்னார் மாவட்ட புதிய நீதவான் ரி.ஜே.பிராபாகரன் குறித்த பகுதிக்குச் சென்று அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட்டதோடு, விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 








மன்னாரில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் மீண்டும் புதிய நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்-படம் Reviewed by Author on June 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.