ஐ.நாவிலும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்! இனி எங்கு சென்று யாரிடம் முறையிடுவது -
ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது இடம்பெற்றுவரும் பக்க அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள குறித்த குழுவினரை, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்றிருக்கக்கூடிய சிலர் அச்சுறுத்தி வருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் எமது பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு வர நாங்கள் முயற்சிக்கின்றபோது அதனை இலங்கையில் இருந்து வந்திருக்கின்ற சிங்கள அதிகாரிகள் குழப்புகின்றனர் எனவும், இந்த அமர்வுகளின் பின்னர் நாங்கள் வெளியில் செல்லும்போது எங்களை பார்த்து முறைத்து அச்சுறுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையிலும்கூட தமிழர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சிங்கள அதிகாரிகள் செயற்படுகின்றார்கள் எனில் இனி எமது பிரச்சினைகளை எங்கு சென்று யாரிடம் நாம் முறையிடுவது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஐ.நாவிலும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்! இனி எங்கு சென்று யாரிடம் முறையிடுவது -
Reviewed by Author
on
June 27, 2018
Rating:
No comments:
Post a Comment